Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியிடம் போலீஸார் விசாரணை: ஊழியர்கள் புகாரில் நடவடிக்கை

நடிகர் விஜய்யை குடும்பத்துடன் சந்திக்க வந்த, விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி யிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் வசித்து வருகிறார். இவரது விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக குமார் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவர் வேலை பார்த்துவந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று குமார் தனது குடும்பத்தினருடன் விஜய்யை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

விஜய் படப்பிடிப்புக்கு சென் றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் வீட்டில் இருந்து ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நீலாங்கரை காவல் நிலைய போலீஸார் குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து விட்டு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குமாரின் மனைவி வசந்தி கூறும்போது, “என் கணவர் குமாரை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும், அதனால் நடிகர் விஜய் அளித்த வீட்டில் இருந்து உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து தொந்தரவு செய்வது வந்தனர். இதுகுறித்து நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து கேட்டறிய வந்தோம்.

விஜய் படப்பிடிப்புக்கு சென்றதை அறிந்ததும் நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். ஆனால் விஜய் வீட்டு ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு தக வல் கொடுத்ததால் எங்களை போலிஸ் ஜீப்பில் காவல் நிலையம் அழைத்து வந்து திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x