Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிகுடி ஒன்றிய அதிமுக சார் பில் ஜெயலலிதா பேரவை கலந்தாய்வுக் கூட்டம் குன்னத்தூரில் நடந்தது. இதில் அதிமுக புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ பேசியதாவது:
நீட் தேர்வு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆகியவை குறித்து ஆர்ப்பாட்டம் செய்தது குற்றமா? அதற்காக எங்கள் மீது வழக்கு போட்டுள்ளனர். அதிமுகவின் செல்வாக்கை அழிக்க மக்களிடம் எதிர்மறை எண்ணங் களை உருவாக்க திமுக முயற்சிக்கிறது. கரோனா 2-ம் அலையின்போது கிராமங்களில் உயிரிழப்புகள் அதிகரித்தன. முதல் அலையின் போது தடுப்பூசி இல்லை. ஆனாலும் கிராமங்களில் கரோனாவை நுழைய விடாமல் தடுத்தோம். நாம் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வில்லை. இவ்வாறு அவர்கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT