இந்தியாவில் 7 லட்சம் போலி வழக்கறிஞர்கள்: முன்னாள் நீதிபதி வீ.பாரதிதாசன் தகவல்

இந்தியாவில் 7 லட்சம் போலி வழக்கறிஞர்கள்: முன்னாள் நீதிபதி வீ.பாரதிதாசன் தகவல்
Updated on
1 min read

விழுப்புரம்: ​இந்தியாவில் 7 லட்சம் போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக முன்னாள் நீதிபதி வீ.பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

விழுப்​புரம் அரசு சட்​டக் கல்​லூரி​யில் நடை​பெற்ற பட்​டமளிப்பு விழா​வில் சென்னை உயர்நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி வீ.​பார​தி​தாசன் பேசி​யது: வழக்​கறிஞர் தொழிலில் ஒரு காலத்​தில் ஆண்​களின் ஆதிக்​கம் இருந்​தது. பெண்​களின் எண்​ணிக்கை குறை​வாக இருக்​கும். இப்​போது 70:30 என்ற அடிப்​படை​யில் இருக்​கிறது.

எதிர்​காலத்​தில் ஆண்​களுக்கு இடஒதுக்​கீடு கேட்​கும் நிலை வரலாம். மாணவர் சேர்க்​கை​யின்​போது மெரிட்​டில் பெண்​கள் வரு​கின்​றனர். வழக்​கறிஞர் தொழிலை​யும் நன்​றாக செய்​கின்​றனர். கீழமை நீதி​மன்​றங்​களில் 60 சதவீதத்​துக்கு மேல் நீதிப​தி​களாக பெண்​கள் உள்​ளனர். உயர் நீதி​மன்​றத்​தில் 13 பெண் நீதிப​தி​கள் உள்​ளனர். இது மகிழ்ச்​சி​யான செய்​தி.

வழக்​கறிஞர் தொழில் மீது அதி​களவு புகார் உள்​ளது. வழக்​கறிஞரை யாரும் மதிப்பதில்​லை. அந்த அளவுக்கு தொழில் சென்​று​விட்​டது. இதற்கு காரணம், எங்​கேங்கோ படித்​து​விட்டு வழக்​கறிஞ​ராக வந்து விடு​கின்​றனர். இது இல்​லாமல் போலி வழக்​கறிஞர்​களும் உள்​ளனர்.

உச்ச நீதி​மன்​றத்​தில் 30 முதல் 40 சதவீதம் போலி வழக்​கறிஞர்​கள் உள்​ளனர் என்று பார்கவுன்​சில் தெரி​வித்​துள்​ளது. இந்​தியா முழு​வதும் உள்ள 18 லட்​சம் வழக்​கறிஞர்​களில் 6 லட்​சம் முதல் 7 லட்​சம் போலி வழக்​கறிஞர்​கள் உள்​ளனர். மோசமடைந்​துள்ள இத்​தொழிலை காப்​பாற்ற வேண்​டும். இதற்கு நேர்​மை​யாக, கடின​மாக, கட்​சி​காரர்​களுக்கு உண்​மை​யாக உழைக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்தியாவில் 7 லட்சம் போலி வழக்கறிஞர்கள்: முன்னாள் நீதிபதி வீ.பாரதிதாசன் தகவல்
“இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை” - பிரதமர் மோடி சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in