Published : 01 Aug 2021 08:06 PM
Last Updated : 01 Aug 2021 08:06 PM

தமிழகத்தில் இன்று 1,990 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 175 பேருக்கு பாதிப்பு: 2,156 பேர் குணமடைந்தனர்

சென்னை

தமிழகத்தில் இன்று 1,990 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,61,587. தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,06,961.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20,524.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,67,30,803.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,57,927.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 25,61,587.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,990

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 175.

* சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 1,675.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,96,478 பேர். பெண்கள் 10,65,071 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,124 பேர். பெண்கள் 866 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,156 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 25,06,961 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 26 பேர் உயிரிழந்தனர். 6 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 20 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,102 ஆக உள்ளது.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 22 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 4 பேர்.

இன்று மாநிலம் முழுவதும் 39577 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24989 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7525 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x