Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளதாவது:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட்1-ம் தேதி நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

2-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்இடி, மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3, 4-ம் தேதிகளில் நீலகிரி,கோவை மாவட்டங்கள், கடலோரமாவட்டங்கள், ஒருசில உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x