Published : 31 Jul 2021 03:13 AM
Last Updated : 31 Jul 2021 03:13 AM
சென்னை, அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில். இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வு வழிகாட்டுதலுக்கான புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான எம்.கே.சண்முகசுந்தரம் எழுதிய Interviews Redefined (நேர்காணல்களின் மறுவரையறை) என்ற தலைப்பிலான புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. முதல்பிரதியை கடந்த ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாணவி பூரணசுந்தரி பெற்றுக்கொண்டார்.
புத்தக ஆசிரியர் எம்.கே.சண்முகசுந்தரம் 1997-ம் ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்றவர். தற்போது சென்னையில் உள்ள MEPS சிறப்பு பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சி ஆணையராக பணிபுரிகிறார். 3 முறை நேர்முகத் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இவர்தனது அனுபவத்தின் மூலம் இப்புத்தகத்தை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் எழுதியுள்ளார். 61 வெற்றியாளர்களிடம் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தலைப்பு வாரியாகஇதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
புத்தக வெளியீட்டு விழாவில் ஆசிரியர் எம்.கே.சண்முகசுந்தரம் கூறும்போது, “குடிமைப் பணிதேர்வு நேர்காணலில் மாணவர்களின் அணுகுமுறை, முடிவெடுக்கும் தன்மை, சாதுர்யம், செயல்திறன் ஆகியவை சோதிக்கப்படுகின்றன. நேர்காணல் நடத்துபவர்கள் பல்வேறு பின்னணி, அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது அனைவரும் பயன்பெறும் வகையில் எழுதப்பட்டுள்ளது” என்றார்.
முதல் பிரதியை பெற்றுக்கொண்ட பூரணசுந்தரி பேசும்போது, “இந்த நூல் மத்திய குடிமைப் பணி தேர்வுக்கு மட்டுமல்லாமல் மாநில குடிமைப் பணிநேர்முகத் தேர்வுக்கும் பயன்படும் வகையில் உள்ளது. நூலின்ஆசிரியர் இதை தமிழில் மொழிபெயர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
விழாவில் மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் பல்வேறுஅதிகாரிகள், சங்கர் ஐஏஎஸ் அகாடமி பயிற்றுநர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT