Published : 22 Feb 2016 08:22 AM
Last Updated : 22 Feb 2016 08:22 AM
திமுக காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடிப்பது சந்தேகம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகியுள்ள 2 ஆயி ரத்துக்கும் அதிகமானவர்கள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் மண்டபத்தில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பாஜக கடந்த மக்களவை தேர்தலைப் போலவே வலுவான கூட்டணியை அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும். தேமுதிக மாநாட்டில் விஜய காந்தை ‘கிங்’ ஆக்க வேண்டும் என்று அக்கட்சித் தொண்டர்கள் கூறியுள்ளனர். இதற்கு நாங்கள் கவலைப்படவில்லை. ஏனென்றால் தேமுதிக எங்கள் கூட்டணியில்தான் உள்ளது. முதல்வர் வேட்பாளரை அறிவித்த கட்சிகள்தான் இதற்காக கவலைப்பட வேண்டும்.
பாஜக சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவது குறித்து கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும். திமுக காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பது சந்தேகமே.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சமக முன்னாள் பொதுச் செயலாளராக இருந்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த கரு.நாகராஜன், ஜெமீலா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT