Published : 31 Jul 2021 03:14 AM
Last Updated : 31 Jul 2021 03:14 AM

பராமரிப்பு பணியால் 3 மின்சார ரயில்கள் இன்று ரத்து

சென்னை

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்தடத்தில் வில்லிவாக்கம் மற்றும் வியாசர்பாடி ஜிவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 11.05 மணி முதல் மதியம் 1.05 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளது.

இதனால், வேளச்சேரி - ஆவடிஇடையே இன்று காலை 10.15, ஆவடி -சென்னை சென்ட்ரல் இடையே காலை11 மணி, ஆவடி - வேளச்சேரி இடையே மதியம் 12.10 மணிக்கு செல்லும் மின்சாரரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து கடம்பத்தூருக்கு மதியம் 12.10மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயில், ஆவடியில் இருந்து இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு மதியம் 12.20-க்குபுறப்பட்டு செல்லும் ரயிலும், திருவள்ளூருக்கு மதியம் 1 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயிலும் இன்றைய தினம் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x