Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM
சர்வதேச கோல்டு கவுன்சில் சார்பில், தங்கத்தின் தேவைக்கான அறிக்கை வெளியீட்டு நிகழ்வு காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. கவுன்சிலின் மண்டல தலைமை செயல் அதிகாரி சோமசுந்தரம் பங்கேற்று அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தங்கம் வாங்குவது மக்களின் பாரம்பரிய அம்சமாக இருக்கிறது. தவிர, நீண்டகால அடிப்படையில் தங்கம் சார்ந்த முதலீடுகள் நல்ல லாபம் தருகின்றன. இதற்கிடையே, கடந்த 2-வது காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவில் தங்கத்தின் தேவை 76.1 டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 19.2 சதவீதம் அதிகம்.
அதுபோல், தங்கத்தின் தேவை மதிப்பு 23 சதவீதம் அதிகரித்து ரூ.32,810 கோடியாக உயர்ந்துள்ளது. தங்கம் சார்ந்த முதலீடுகளும் 6 சதவீதம் அதிகரித்துள்ளன.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 4.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இடிஎப் முதலீடு 2-ம் காலாண்டில் 40.7 டன் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில்தான் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT