Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM

இந்தியாவில் தங்கத்தின் தேவை 19.2 சதவீதம் அதிகரிப்பு

சென்னை

சர்வதேச கோல்டு கவுன்சில் சார்பில், தங்கத்தின் தேவைக்கான அறிக்கை வெளியீட்டு நிகழ்வு காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. கவுன்சிலின் மண்டல தலைமை செயல் அதிகாரி சோமசுந்தரம் பங்கேற்று அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:

தங்கம் வாங்குவது மக்களின் பாரம்பரிய அம்சமாக இருக்கிறது. தவிர, நீண்டகால அடிப்படையில் தங்கம் சார்ந்த முதலீடுகள் நல்ல லாபம் தருகின்றன. இதற்கிடையே, கடந்த 2-வது காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவில் தங்கத்தின் தேவை 76.1 டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 19.2 சதவீதம் அதிகம்.

அதுபோல், தங்கத்தின் தேவை மதிப்பு 23 சதவீதம் அதிகரித்து ரூ.32,810 கோடியாக உயர்ந்துள்ளது. தங்கம் சார்ந்த முதலீடுகளும் 6 சதவீதம் அதிகரித்துள்ளன.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 4.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இடிஎப் முதலீடு 2-ம் காலாண்டில் 40.7 டன் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில்தான் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x