Published : 17 Feb 2016 02:24 PM
Last Updated : 17 Feb 2016 02:24 PM
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. இவர்களுக்கு மாற்று யார் என்பதில்தான் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது என பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு பேசினார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி பாஜக ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு பேசியதாவது:
தமிழக வாக்காளர்களை பொறுத்த வரை, யார் வர வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்ற அடிப்படையில் தான் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பின்னர் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. இவர்களுக்கு மாற்று யார் என்பதில்தான் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஊழல் தான் மிகப்பெரிய பிரச்சினை. அடுத்து மதுவால் ஏற்படும் பிரச்சினை. ஊழலற்ற ஆட்சியை பாஜக-வால் தமிழகத்திலும் தர முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத ஒரு கூட்டணியை அமைக்க முடியாது என்ற கருத்து இருந்து வந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த இரு கட்சிகளும் இல்லாத ஒரு கூட்டணி பாஜக தலைமையில் அமைந்தது.
ஈரோடு திராவிட கட்சிகளுக்கு அடித்தளமாய் இருந்தது போல், தேசியத்துக்கும், ஆன்மிகத்துக்கும் உறு துணை யாய் இருக்கும் வகையில் செயல் பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பாஜக மாநில பிரச்சாரப் பிரிவு தலைவர் ஏ.சரவணன், கோட்டப் பொறுப் பாளர் வே.வைர வேல், மாநில வழக்கறி ஞர்கள் பிரிவு தலை வர் என்.பி. பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண் டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT