Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

திமுக ஆட்சியில் மின்வெட்டு அதிகரிப்பு: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

நாமக்கல்

திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் ‘இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்' என்ற நிகழ்ச்சிக்கான பயிற்சி முகாம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய பாஜகவினர் அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று மக்களுடைய உள்ளம் கவர்ந்து, அவர்களை பாஜகவில் இணையும் விழா ஆக., 1-ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 11 பெண் அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆக., 3-ம் தேதி நாமக்கல் பகுதியில் நடைபெறும் தீரன் சின்னமலை நினைவு நாளில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லை. மின்சாரம் தடையின்றி கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு அதிகமாக உள்ளது. அதை சரி செய்ய வேண்டும், என்றார். கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் நாகராஜ், முத்துக்குமார், சேதுராமன், மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x