320 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: நகர நிலவரி திட்டத்தின்கீழ் அமைச்சர் நாசர் வழங்கினார்

பருத்திப்பட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குகிறார் அமைச்சர் சா.மு.நாசர்.
பருத்திப்பட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குகிறார் அமைச்சர் சா.மு.நாசர்.
Updated on
1 min read

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டில் நகர நில வரிதிட்டத்தின்கீழ் மொத்தம் 320 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று வழங்கினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ், இலவச பட்டாவழங்கக் கோரி, தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அதன்படி, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு ஊராட்சியில் 320 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் ஆவடிவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், வார்டுகளுக்கும், பட்டாக்களை வாரந்தோறும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நகர நிலவரி தனிவட்டாட்சியர் வில்சன், ஆவடிவட்டாட்சியர் செல்வம், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in