Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM
சென்னை - புதுச்சேரி - காரைக்கால் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது,
‘‘சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடலோர படகு போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய துறைமுகம், கப்பல், நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன்படி, ரோரோரோபேக்ஸ் என்ற சரக்கு, பயணியர் கப்பல் சேவைக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து அறிமுகம் செய்யப்படஉள்ளது. இதற்கான முதல்கட்டஆலோசனைக் கூட்டம் சமீபத்தில்நடந்தது. 5 மாதங்களுக்குள் கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT