Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

ஆளுநர் பன்வாரிலாலுடன் அண்ணாமலை சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று சந்தித்துப் பேசினார்.

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள்ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அண்ணாமலை நேற்று காலை சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, எம்.சக்கரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றதற்காக அண்ணாமலைக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். நடப்பு அரசியல் சூழல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ‘ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் எளிமையும், பொறுப்புணர்வும், தமிழக தலைவர்களுடன் காட்டும் இணக்கமும் தமிழகத்தின் மேன்மைக்கு பெரிதும் துணை புரிகின்றன. ஆளுநருடனான சந்திப்பு என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x