பக்கவாதத்தால் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

பக்கவாதத்தால் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு
Updated on
1 min read

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் எஸ்.பி.பாலகணேஷ் (46). கடந்த 7-ம் தேதி பக்கவாதத் தால் பாதிக்கப்பட்ட பாலகணேஷ் சென்னை மேடவாக்கம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்பு களை தானம் செய்ய விரும்புவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அதன்படி டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், தோல் மற்றும் கண் களை எடுத்தனர். குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 2 நோயாளிக்கு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகமும், அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிக்கு இதய மும், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் இருந்த 2 நோயாளிகளுக்கு கண்களும் பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிக்கு பொருத்தப் பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in