Published : 17 Feb 2016 08:58 AM
Last Updated : 17 Feb 2016 08:58 AM

காவல் துறையில் 12 ஆயிரம் புதிய பணியிடங்கள்

39 சிறப்பு நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுகள் மூலம் ரூ.3 ஆயிரத்து 642 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல் துறையில் 12 ஆயிரத்து 93 கூடுதல் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 32 புதிய காவல் நிலையங்கள், 47 புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள், 4 புதிய காவல் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 496 காவலர் குடியிருப்புகள், 290 காவல் நிலையங்கள், 160 பிற காவல் துறை கட்டிடங்கள் என கட்டமைப்பு வசதிகளை ஆயிரத்து 205 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் இந்த அரசு மேம்படுத்தியுள்ளது. 2016-17-ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரத்து 99 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறையினர் கடந்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரத்து 204 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். ஆயிரத்து 858 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அழிவிலிருந்து மீட்டுள்ளனர். இத்துறைக்கு தற்போது ரூ.227 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகள் வேலைவாய்ப்பு பயிற்சி, சிறைச்சாலைகள் கட்டமைப்பு வசதிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரத்து 26 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 281 கோடியே 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x