Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

திமுக-வில் இணைந்த அமமுக முன்னாள் அமைச்சர்: அதிமுக முன்னாள் எம்.பி.க்களும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்

சென்னை

அமமுக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பி.ஜி.நாராயணன், என்.ஆர்.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அமமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், ராமநாதபுரம் மாவட்ட அமமுக செயலர் வ.து.ந.ஆனந்த், நாமக்கல் தெற்கு மாவட்ட அமமுக செயலர் பி.பி.சாமிநாதன், மாநில மாணவரணி இணைச் செயலர் எம்.டி.வைரமணி, சேலம் மத்திய மாவட்டஅமமுக செயலரும், முன்னாள்எம்எல்ஏவுமான எஸ்.இ.வெங்கடாஜலம் உள்ளிட்ட 200-க்கும் அதிகமான அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

ஈரோடு மாவட்ட அதிமுக

அதேபோல, ஈரோடு மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் பி.ஜி.நாராயணன், என்.ஆர்.கோவிந்தராஜ், முன்னாள் எம்எல்ஏ காங்கேயம் செல்விமுருகேசன், தருமபுரி மாவட்டஅதிமுக முன்னாள் செயலரும், முன்னாள் எம்.பி., எம்எல்ஏவுமான எம்.ஜி.சேகர், பொள்ளாச்சி தெற்குஒன்றியப் பெருந்தலைவர் ப.லட்சுமி மற்றும் ப.சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

மேலும், அதிமுக கன்னியாகுமரி மாவட்ட துணைச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், மாநில இலக்கிய அணி துணைச் செயலர் பொறி.நாஞ்சில் டொமினிக், மாவட்ட இணைச் செயலர் டி.லதா ராமசந்திரன், மாவட்ட விவசாய அணிச் செயலர் டி.மஹாஜி செல்வகுமார் உள்ளிட்ட 300-க்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கட்சியில் இணைந்த அனைவரையும் வரவேற்ற முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

திமுக பொதுச் செயலர் துரைமுருகன், முதன்மைச் செயலர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலர் க.பொன்முடி, அமைச்சர்கள் அர.சக்கரபாணி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், துணை அமைப்புச் செயலர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலர் பூச்சி எஸ்.முருகன், மாவட்டச் செயலர்கள் எஸ்.முத்துசாமி (ஈரோடு தெற்கு), என்.நல்லசிவம் (ஈரோடு வடக்கு), ஆர்.ராஜேந்திரன் (சேலம் மத்திய மாவட்டம்), கே.எஸ்.மூர்த்தி (நாமக்கல் மேற்கு), என்.சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி கிழக்கு), மாவட்டப் பொறுப்பாளர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), ஜெயராமகிருஷ்ணன் (திருப்பூர் தெற்கு), தடங்கம் பெ.சுப்பிரமணி (தருமபுரி வடக்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x