Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

தென்மேற்கு பருவக் காற்றால் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசிமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

21, 22, 23-ம் தேதிகளில் நீலகிரி,கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தேனி,திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

19-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செமீ, சென்னை புழலில் 5 செமீ,கோவை மாவட்டம் வால்பாறை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, எண்ணூரில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x