Published : 20 Feb 2016 08:56 AM
Last Updated : 20 Feb 2016 08:56 AM

2009-ம் ஆண்டு சம்பவம் கருப்பு தினமாக அனுசரிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வழக் கறிஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து நேற்று கருப்பு தினம் அனுசரிக் கப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டதுடன், நீதிமன் றத்தையும் புறக்கணித்தனர்.

கடந்த 2009-ம் ஆண்டு பிப்.19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழக காவல் துறையினர் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களைத் தாக்கினர். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினத்தை வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.

அதன்படி இந்தாண்டு கருப்பு தினத்தை நேற்று அனுசரிப்ப துடன், சென்னையில் உள்ள நீதி மன்றங்களில் பணிபுரியும் வழக் கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப் பில் ஈடுபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடவடிக்கை தேவை

அதன்படி, உயர் நீதிமன்ற வளாகம் ஆவின் நுழைவுவாயில் அருகே நேற்று பகல் 11 மணியளவில் வழக்கறிஞர்கள் கூடினர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மோதல் சம்பவத்துக்கு காரணமான நான்கு காவல் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிட் டனர். இப்போராட்டம் சுமார் அரை மணி நேரம் நடந்தது. மேற்கண்ட சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். இருந்தாலும் நீதிமன்றப் பணிகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x