Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார்பெட்டி வைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் மதபோதகர் ஜெயசீலன், அந்த வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம், மதபோதகர் ஜெயசீலனுக்கு 5 ஆண்டுசிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஜெயசீலன் தாக்கல் செய்தமேல் முறையீட்டு மனு மீதானவிசாரணை, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நடந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

‘‘பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும், சமூகநலத் துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி அமைக்க வேண்டும். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வாரம்தோறும் ஆய்வு செய்து, புகாரில் முகாந்திரம் இருந்தால், காவல் துறை நடவடிக்கைக்கு பரிந்துரைக்க வேண்டும்’’ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x