குழந்தை திருமணம் செய்தால் குற்ற வழக்கு: அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை

தூத்துக்குடியில் நடந்த சமூக நலத்துறையின் மண்டல ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார். 	                 படம்: என்.ராஜேஷ்.
தூத்துக்குடியில் நடந்த சமூக நலத்துறையின் மண்டல ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார். படம்: என்.ராஜேஷ்.
Updated on
1 min read

சமூக நலத்துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நல உதவிகளை வழங்கி, பேசியதாவது:

குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகையவர்கள் மீது குற்ற வழக்கு பதியப்படும். குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் அனுமதி பெற்றுதான் நடத்த வேண்டும். கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. அந்த குழந்தைகள் படிப்பதற்கான செலவுகள் குறித்த அறிக்கையை உடனுக்குடன் தயார் செய்து அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார் அவர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர், சமூக நல இயக்குநர் டி.ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் வி.அமுதவல்லி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் , ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in