Published : 14 Feb 2016 11:42 AM
Last Updated : 14 Feb 2016 11:42 AM
கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் கோவைக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 8-ம் தேதி மதியம் 2.45 - க்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00651) மறுநாள் அதிகாலை 4.20-க்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த மாதம் 6-ம் தேதி இரவு 10.30-க்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00648) மறுநாள் காலை 6.40-க்கு கோவையை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT