Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கடந்த 12-ம் தேதி முதல் கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. இதன்படி கடைகளை திறந்து வைப்பதற்கான நேரம் இரவு 9 மணிவரை நீட்டிக்கப்பட்டது.
இதுதவிர, ஜூலை 12 முதல் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்டவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டது.
அதே நேரம், புதுச்சேரி தவிர இதர மாநிலங்களுக்கிடையில் பேருந்து போக்குவரத்துக்கும், சர்வதேச விமான போக்குவரத்துக்கும் தடை தொடர்கிறது. திரையரங்குகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கும் தடை தொடர்கிறது.
இந்நிலையில், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 19-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அடுத்தகட்ட ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT