நுண்ணறிவு பிரிவில் இருந்து 13 காவலர்கள் வெளியேற்றம்

நுண்ணறிவு பிரிவில் இருந்து 13 காவலர்கள் வெளியேற்றம்
Updated on
1 min read

கடந்த ஒரு மாதத்தில் மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவில் இருந்து 13 காவலர்கள் வேறு பிரிவுக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவில் உதவி ஆணையர் தலைமையில் (ஐஎஸ்) ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் போராட்டம், சட்டம் ஒழுங்கு பாதிப்பு தொடர்பான நிகழ்வுகளை முன்கூட்டியே சேகரித்து, காவல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், வியாழக்கிழமை தோறும் நுண்ணறிவு பிரிவு காவலர்களின் கூட்டத்தை நடத்தி, அவர்களது உளவுத் திறனை பரிசோதிக்கிறார். இதன் அடிப்படையில், 9காவலர்கள் நுண்ணறிவு பிரிவில்இருந்து வெளியேற்றப்பட்டு, காவல் நிலைய பணியிடத்துக்கு மாற்றப்பட்டனர். இருநாட்களுக்கு முன்னர், மேலும் 4 பேர் இங்கிருந்துவெளியேற்றப்பட்ட னர்.

இதுதொடர்பாக காவல்துறை யினர் கூறும்போது, ‘‘உளவு பிரிவில் நீண்ட நாட்களாக பணியாற்றியதால் விருப்பத்தின் அடிப்படையிலும், ஆட்கள் கூடுதலாக இருந்த தாலும் மாற்றப்பட்டுள்ளனர். வேறு எந்தக் காரணமும் கிடையாது’’ என்றனர்.

நுண்ணறிவு பிரிவு வட்டாரத்தில் விசாரித்தபோது, “சேகரிக்கும் தகவல்கள் மேலோட்டமாக இல்லாமல், முழுமையாக இருக்க வேண்டும் என ஆணையர் எதிர்பார்க்கிறார். சிலர் நீண்ட ஆண்டுகளாக உளவு பிரிவில் பணியாற்றி வந்தனர். இதுபோன்ற காரணங்களால் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in