Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு வனத்துறை அழைப்பு

கோவை மாவட்ட வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம்வேளாண் காடுகள் திட்டத் தின் கீழ் விவசாயிகள் இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வனவியல் விரிவாக்க கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், 1,95,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் உள்ளன. ஆர்வமுள்ள கோவை மாவட்ட விவசாயிகள் வன அலுவலர்களை தொடர்பு கொண்டு தேக்கு, மலைவேம்பு, மகாகனி, செம்மரம், புளி, வில்வம், நீர்மருது, வாகை, சந்தனம், வேங்கை, நெல்லி, ஈட்டி, பலா, புங்கன், வேம்பு மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

அதன்படி, நாற்றங்கால் அலுவலகங்களை 97872 37131, 94430 10826 (மேட்டுப்பாளையம்), 75501 56841 (வடகோவை), 94436 32026 (இருட்டுபள்ளம்), 90806 79611 (மதுக்கரை) ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். மரக்கன்றுகளை வாங்க பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விவசாய நிலத்தின் சர்வே எண் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு ஆவணம், ஆதார் அட்டை அல்லது வேறு ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x