டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கரோனா தடுப்பு நடவடிக்கையால் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி, டெங்கு பரவலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, கரோனா இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் பலன் குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி, மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in