Published : 13 Feb 2016 08:34 AM
Last Updated : 13 Feb 2016 08:34 AM
‘பஸ் டே’ (பேருந்து தினம்) கொண்டாட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய 6 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் நேற்று முன்தினம் ஆவடியில் இருந்து மந்தைவெளியை நோக்கிச் சென்ற தடம் எண் 41-டி பேருந்தில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் ‘பஸ் டே” கொண்டாடினர். பச்சையப்பன் கல்லூரி அருகே வந்தபோது பேருந்தில் இருந்த மாணவர்களுக்கும், சாலையில் நின்றுக் கொண்டிருந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மாணவர்கள் கற்களை வீசி தாக்கியதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பேருந்து ஓட்டுநர் ரவி, நடத்துநர் சங்கர் ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவர்களான புழலை சேர்ந்த மொய்தீன் (19), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் (20), மீஞ்சூரை சேர்ந்த சக்திவேல் (19), திருவொற்றியூரைச் சேர்ந்த அசோக்குமார் (20), அம்பத்தூரைச் சேர்ந்த பாண்டியன் (19), ஓட்டேரியைச் சேர்ந்த அஜய்குமார் (19) ஆகியோரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT