Published : 27 Feb 2016 09:40 AM
Last Updated : 27 Feb 2016 09:40 AM

சிறையில் மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் கேரள இந்திய கம்யூ. தலைவர் சந்திப்பு

‘கம்யூனிஸ்ட்களுக்கும், மாவோ யிஸ்ட்களுக்கும் போராட்ட வடிவம் மட்டுமே வேறுபடுகிறது; கோரிக்கைகள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தே இருப்பதாக கேரள இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் கானம் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை சிறையில் அடைக்கப் பட்டுள்ள கேரள மாவோயிஸ்ட் இயக்கத்தினரை, கானம் ராஜேந் திரன் நேற்று சந்தித்தார். சிறை வளாகம் முன்பாக செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது:

சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் மாவோ யிஸ்ட்கள் என கோவையில் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் சந்திக்க வந்தோம். அதில் அனூப், சைனா இருவரை மட்டுமே சந்திக்க முடிந்தது. தமிழகம், கேரளம் இரண்டு மாநிலங்களிலும் அரசியல் சிறைவாசிகள் ஒரே மாதிரிதான் நடத்தப்படுகிறார்கள். ஒரு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவரும்போது, வேறொரு வழக்கை புனைந்து கைது செய்யப்படும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் மனதளவில் துன்புறுத்தலை சந்திக்கிறார்கள்.

கோவையில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மாவோ யிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் கள் என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவு. எனவே கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்வதை வரை யறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x