Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை முதல் (12-ம் தேதி) வார நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும்அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயிலகள் இயக்கப்படும். அரசு விதிமுறைகளை பின்பற்றி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரையில் 40 பயணிகளிடமிருந்து ரூ.8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT