

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள், 3 மாதங் களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு அனுப்பப்படுவர். நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலை மையிலான நீதிபதிகளின் 3 மாத பணிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
இதையடுத்து ஆகஸ்ட் 2 முதல் 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குகளை விசா ரிக்கும் நீதிபதிகள், அவர்கள் விசாரிக்கவுள்ள வழக்குகளின் வகை பட்டியலும் வெளியிடப்ப ட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ்.ஆனந்தி ஆகியோர் முதல் அமர்வில் பொதுநல மனுக்கள், ரிட் மேல்முறையீடு மனுக்களை யும், நீதிபதிகள் வி.பார்தீபன், ஜெ.நிஷாபானு ஆகியோர் 2-வது அமர்வில் ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கும்.
நீதிபதி டி.கிருஷ்ணகுமார் 2018 முதல் தாக்கலான தொழிலாளர், அரசுப் பணி தொடர்பான ரிட் மனுக்கள், தியாகிகள் ஓய்வூதிய மனுக்கள், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் 2017 வரையிலான தொழிலாளர், அரசு பணி தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் மோட்டார் வாகனம், வாகன வரி, கலால், ஏற்றுமதி, இறக்குமதி, மத்திய கலால், கனிமம், வனம் மற்றும் தொழிற்சாலைகள் தொடர் பான ரிட் மனுக்கள், நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா 2015 முதலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களை விசாரிப்பர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முதல் மேல்முறையீடு மற்றும் 2014 வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி ஆர்.தாரணி 2015 முதல் 2018 வரையிலான உரிமையியல் சீராய்வு மனுக்களையும், நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்கின் மேல்முறையீடு மனுக்களையும், 2018 முதலான குற்றவியல் சீராய்வு மனுக் களையும் விசாரிக்க உள்ளனர்.
நீதிபதி ஆர்.பொங்கியப்பன் 2017 வரையிலான பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மேல்முறையீடு மனுக்கள் மற்றும் குற்றவியல் சீராய்வு மனுக்கள், சிபிஐ, லஞ்ச ஒழிப்பு வழக்குகளையும், நீதிபதி பி.புகழேந்தி ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, கல்வி, நிலச் சீர்தி ருத்தம், நில உச்சவரம்பு, கையகப்படுத்தல், நில சட்டம் தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஜி.இளங்கோவன் 2018 முதலான குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 407, 482-ல் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், நீதிபதி கே.முரளிசங்கர் 2019 முதலான உரிமையியல் மனுக்கள் மற்றும் உரிமையியல் சீராய்வு மனுக்களையும் விசாரிப்பர்.