Published : 22 Feb 2016 08:39 AM
Last Updated : 22 Feb 2016 08:39 AM
தமிழகத்தில் 3-வது அணி ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என கொமதேக மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
சேலத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: மது விலக்கு குறித்த அறிவிப்பு வராதது ஏமாற்றமே. மதுக்கடைகள் நேரத்தை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறைக்கலாம்.
தமிழகத்தில் திமுக, அதிமுக-வை தவிர்த்து 3-வது அணி ஆட்சியமைக்க வாய்ப்பு இல்லை. முரண்பாடான கருத்து களைக் கொண்டவர்கள் சேர்ந்ததே மக்கள் நலக் கூட்டணி. இவர்கள் தேர்தலுக்காக ஒத்த கருத்து கொண்டவர்களாக வலம் வருகின்றனர். குறைந்த வாக்கு சதவீதத்தை வைத்துக் கொண்டு யார் முதல்வர் என்ற சர்ச்சை கொண்ட இந்த அணியால் ஆட்சி அமைக்க முடியுமா?
கொமதேக சார்பில் மார்ச் 13-ம் தேதி சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி நடக்கிறது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் கூட்டணியை அறிவிப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT