Last Updated : 09 Jul, 2021 01:35 PM

 

Published : 09 Jul 2021 01:35 PM
Last Updated : 09 Jul 2021 01:35 PM

புதுச்சேரியில் 126 பேருக்கு கரோனா தொற்று; ஒருவர் உயிரிழப்பு: பாதிப்பு சதவீதம் 2.08 ஆகக் குறைந்தது

புதுச்சேரியில் புதிதாக 126 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாநிலத்தின் பாதிப்பு சதவீதம் 2.08 ஆகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 9) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,048 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 103, காரைக்காலில் 6, மாஹேவில் 17 பேர் என மொத்தம் 126 (2.08 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

மேலும், புதுச்சேரியில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,768 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 697 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 230 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,465 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,695 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக 192 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 234 (97.08 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 13 லட்சத்து 73 ஆயிரத்து 59 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11 லட்சத்து 78 ஆயிரத்து 536 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 5 லட்சத்து 64 ஆயிரத்து 970 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x