Published : 08 Jul 2021 04:07 PM
Last Updated : 08 Jul 2021 04:07 PM

பத்திரப் பதிவுத்துறையில் ஊழலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

பத்திரப் பதிவுத்துறையில் நடக்கும் ஊழலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அவர், மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்யக் கோரி, கருப்பு எழுத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதில் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சார் பதிவாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, பதிவுத்துறையில் ஊழலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x