Published : 04 Feb 2016 08:31 AM
Last Updated : 04 Feb 2016 08:31 AM

தேமுதிக மாநாட்டுப் பணிகள் பூமி பூஜையுடன் தொடக்கம்

தேமுதிக மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகளுக்காக, காஞ்சி புரம் அடுத்த வேடல் பகுதியில் நேற்று அக்கட்சியினர் பூமி பூஜை செய்து பந்தகால் நட்டனர்.

தேமுதிக சார்பில் வரும் 20 ம் தேதி காஞ்சிபுரம் அடுத்த வேடல் கிராமத்தில், அரசியல் திருப்பு முனை மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகளுக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இதில், தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்திசாரதி, மாவட்ட செயலாளர்கள் அனகை முருகேசன், தங்கம் தென்பாண் டியன், கிருஷ்ணமூர்த்தி, நகரச் செயலாளர் நித்தியகுமார் ஆகி யோர் பங்கேற்றனர். மேலும், மேடை அமைக்கும் பகுதியில் பந்தகால் நட்டு பூஜை நடத்தினர்.

இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது மாநாட்டில், 250 பேர் உட்காரும் வகையில் பிரம்மாண்ட மேடையும், மேடையின் முன்பகுதியில் காஞ்சிபுரம் கோயில் கோபுரங்கள், நெசவாளர்கள் மற்றும் தமிழக சட்டமன்றம் முப்பரிமாண தோற் றத்துடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், மாநாட்டில் 1 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. 10 லட்சத் துக்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x