Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

பறிமுதல் செய்த 2.20 லட்சம் வாகனம் விடுவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே10-ம் தேதி முதல் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டன. விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன. ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 80 நாட்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த வாகனங்கள் அனைத்தையும் அதன் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், கடந்த 7 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x