Published : 06 Jul 2021 03:15 AM
Last Updated : 06 Jul 2021 03:15 AM

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பா தற்காலிக செவிலியர்கள் திடீர் போராட்டம்: இரண்டு மாதம் சம்பளம் விரைவில் வழங்க அதிகாரிகள் உறுதி

கரோனா சிகிச்சை பிரிவில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த செவிலியர்கள் திடீரென பணியில் இருந்து நீக்கப்பட்டதால், மீண்டும் பணி வழங்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நீக்கம் செய்யப் பட்ட 96 தற்காலிக செவிலியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி இரண்டாவது நாளாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றிய 96 செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு, தினசரி 444 ரூபாய் வீதம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 96 பேரையும் கடந்த 1-ம் தேதி முதல் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் கடந்த 1-ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களிடம் கோரிக்கை மனு மட்டும் பெற்றுக்கொண்டு விசாரிப்பதாக ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திரண்ட செவிலியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக் கோரி இரண்டாவது நாளாக நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர் கருணாகரன், செவிலியர்களில் முக்கிய நபர்களை மட்டும் ஆட்சியர் அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்வதாக கூறினார்.

அப்போது, ‘‘நாங்கள் ஏற்கெனவே பல்வேறு இடங் களில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் பணி புரிந்து வந்தோம். கரோனா சிகிச்சை வார்டுகளில் வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டதும் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தற்காலிக ஊதியம் அடிப்படையில் பணியில் சேர்ந்தோம். இப்போது வேலை இல்லை என்று கூறிவிட்டனர். இரண்டு மாதம் சம்பளமும் வழங்கவில்லை. இந்த வேலையை நம்பி ஏற்கெனவே தனியார் மருத்துவமனைகளில் செய்துவந்த வேலையும் பறிபோய்விட்டது’’ என்றனர்.

முடிவில் செவிலியர்கள் 10 பேரை ஆட்சியர் அலுவலகத்துக் குள் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். நேற்றும் ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனுவை அளித்தனர். தற்காலிக அடிப்படையில் பணி வழங்கியதால் மீண்டும் தேவை ஏற்படும்போது மட்டுமே பணி வழங்கப்படும் என தெரிவித்த அதிகாரிகள் இரண்டு மாதம் சம்பளத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று, செவிலியர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x