Published : 14 Feb 2016 10:33 AM
Last Updated : 14 Feb 2016 10:33 AM
உலக குழந்தைகள் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஃப்ரீடம் ஃபார் கேன்சர் ரிலீஃப் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் சென்னையில் நாளை (15-ம் தேதி) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் டாக்டர் அனிதா ரமேஷ் நேற்று கூறியதாவது:
இந்தியாவில் குழந்தைப் பருவத்தில் கண்களை பாதிக்கும் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த புற்றுநோயால் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பாதிக்கப்படுகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், முழுமையாக குணப்படுத்த முடியும்.
50 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைப் பருவ புற்றுநோய்க்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் இருந்தது. தற்போது நல்ல மருத்துவ வசதி உள்ளது.
உலக குழந்தைகள் புற்றுநோய் தினம் வரும் 15-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். சங்கர நேத்ராலயா மருத்துவமனை, சவீதா மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. குழந்தைப் பருவத்தில் கண்களை பாதிக்கும் புற்றுநோய் குறித்து பெற்றோர், பொதுமக்களுக்கு ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT