Published : 04 Jul 2021 03:13 AM
Last Updated : 04 Jul 2021 03:13 AM

கரோனா தொற்றைத் தொடர்ந்து செங்கை மாவட்டத்தில் டெங்குவால் 22 பேர் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் தீவிரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 22 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள்பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே, டெங்கு காய்ச்சல் பாதிப்புஅதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் சென்னை பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மூன்று சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மழைக்காலம் தொடங்க உள்ளதால் டெங்குவின்பாதிப்பு அதிகமாகும் வாய்ப்புள்ளது. கரோனா தொற்றுடன், டெங்கு காய்ச்சலும் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இன்னும் சில நாளில், மழைக்காலம் தொடங்க உள்ளதால், நோய் தடுப்பு பணியை தீவிரப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் டெங்கு பாதிப்பைத்தடுக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கொசு ஒழிப்பாளர்கள் மூலம் மருந்து தெளிக்கஏற்பாடு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: பருவ மாற்றத்தின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சமடைய தேவையில்லை. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்களும் தங்களது சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரித்து, வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x