Published : 02 Jul 2021 01:21 PM
Last Updated : 02 Jul 2021 01:21 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம்; 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக ஜூலை 2 அன்று சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

ஜூலை 3 அன்று சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

ஜூலை 4 அன்று சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

ஜூலை 5 அன்று வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

ஜூலை 6 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு

ஆண்டிபட்டி (மதுரை) 13 சென்டிமீட்டர், கே.சி.எஸ்.என்.எல் அரியலூர் (கள்ளக்குறிச்சி) 11 சென்டிமீட்டர், மதுரை தெற்கு கடனூர் (கள்ளக்குறிச்சி) தலா 10 சென்டிமீட்டர், பாடாலூர் (பெரம்பலூர்) பாலக்கோடு (தர்மபுரி) புவனகிரி (கடலூர்) தலா 9 சென்டிமீட்டர், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 8 சென்டிமீட்டர் தாத்தையங்கார் பேட்டை (திருச்சி) ஆத்தூர் (சேலம்) திருவையாறு (தஞ்சாவூர்) தலா 7 சென்டிமீட்டர் பவானிசாகர் (ஈரோடு) குளித்தலை (கரூர்) 6 சென்டிமீட்டர் தர்மபுரி (தர்மபுரி), விராலிமலை (புதுக்கோட்டை) தலா 5 சென்டிமீட்டர்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல் பகுதிகளில் 12 முதல் ஜூலை 4 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற் குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக் கடல் பகுதிகள் ஜூலை 2 முதல் ஜூலை 6 வரை தென் மேற்கு மத்திய மேற்கு மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் பலத்த காற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் மீனவர்கள் மேற் குறிப்பிட்ட தேதிகளில் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x