Published : 14 Feb 2016 11:52 AM
Last Updated : 14 Feb 2016 11:52 AM

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.68 கோடியில் 68 மாணவ, மாணவியர் விடுதிகள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ரூ.68.37 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி, கல் லூரி மாணவ, மாணவிகளுக்கான 68 விடுதிக் கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 8-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் நலத்துறை சார்பில் கட்டப் பட்டுள்ள மாணவ, மாணவிகள் விடுதி கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெய லலிதா திறந்துவைத்தார்.

விழுப்புரத்தில் ரூ.1 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் 9 ஆயிரத்து 853 சதுர அடி பரப்பளவில் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகள் விடுதியும் திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகர், தூத்துக் குடி, கன்னியாகுமரி, வேலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.21 கோடியே 59 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் அரசு பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 25 விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் காரைக் குடி, கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 94 லட்சத்து 89 ஆயிரத்தில் அரசு பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான 2 விடுதிகளும் மன்னார்குடி, பெரியகுளம், கூடலூர் ஆகிய இடங்களில் ரூ.2 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரத்தில் அரசு பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கான 3 விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திரு வாரூர், நாகப்பட்டினம், தேனி, கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ரூ.10 கோடியே 11 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 12 விடுதிகளும் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவாரூர் ஆகிய மாவட் டங்களில் ரூ.26 கோடியே 92 லட்சத்து 82 ஆயிரத்தில் பிற் படுத்தப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 20 விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம் வலங்கை மானில் ரூ.3 கோடியே 68 லட்சத்து 39 ஆயிரத்தில் சீர்மரபினர் பள்ளி மாணவர் விடுதி, வாணியம்பாடி, கோவை, கடையநல்லூர் ஆகிய இடங்களில் சிறுபான்மையினர் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகள், தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் கள்ளர் சீரமைப்புப் பள்ளி மாணவர் விடுதிகள் என மொத்தம் ரூ.68 கோடியே 37 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 68 விடுதி கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெய லலிதா திறந்துவைத்தார்.

இந்த விடுதிகளில் கிரானைட் சமையல் மேடை, குடிநீர் சுத்திகரிக் கும் கருவி, சூரிய ஒளி மூலம் நீரை சூடுபடுத்தும் கருவி, மின்சார புகைபோக்கி, தரைதள தண்ணீர் சேமிப்புத் தொட்டி, குளிர்சாதனப் பெட்டி, சூரிய ஒளி போட்டோ வோல் டிக் பவர் பிளான்ட், மேம்படுத்தப் பட்ட சமையல் கூடம், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பிரத்யேக கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ் ணன், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர் நலத்துறை செய லாளர் த.உதயசந்திரன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். இவ் வாறு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x