Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 7 முதல் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 7 முதல் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் ராயப்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் யாத்திரை நடத்துவது, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு ஜூலை 7 முதல் 17-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலின்படி கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் கரோனா பாதிப்பால் உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் தாமோதரன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x