Published : 30 Dec 2015 08:03 AM
Last Updated : 30 Dec 2015 08:03 AM

புத்தாண்டு கொண்டாட்டம்: 108 ஆம்புலன்ஸ் சேவையில் கூடுதலாக 14 வாகனங்கள் சேர்ப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகரிக்கப்படுகி றது.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கம் போல் இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட் டத்தில் அதிவேகமாக செல்லும் பைக்குகள், கார்கள் விபத்துகளில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது. அதனால் இந்த புத்தாண்டு தினத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் அதிகாரி பிரபுதாஸ் கூறும்போது, “சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 41 வாகனங்கள் உள் ளன. புத்தாண்டு அன்று கூடுதலாக மணலில் செல்லக்கூடிய சிறியரக 2 வாகனங்கள் உட்பட 16 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். 108 கட்டுப்பாட்டு அறையில் காவல்துறையினரும் பணியில் ஈடுபட உள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x