Published : 30 Jun 2021 06:57 PM
Last Updated : 30 Jun 2021 06:57 PM

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவு சிறப்பு அதிகாரிக்குக் கூடுதல் பொறுப்பு: அரசு கேபிள் டிவி இயக்குநர் நியமனம்

சென்னை

2 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரிக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு இன்று பிறப்பித்த உத்தரவு:

''உங்கள் தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்குக் கூடுதல் பொறுப்பாக முதலமைச்சர் தனிப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொறுப்பும், குறைதீர் மற்றும் இ-ஆளுமைப் பிரிவு கூடுதல் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலனுக்குக் கூடுதல் பொறுப்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x