Published : 27 Jun 2021 01:42 PM
Last Updated : 27 Jun 2021 01:42 PM

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஜூன் 27) வெளியிட்ட உத்தரவு:

"1. ஆயுதப்படை போலீஸ் (சென்னை) ஐஜிபி-யாக பதவி வகிக்கும் ஜெ.லோகநாதன், சென்னை காவல் ஆணையரக தலைமையிட கூடுதல் ஆணையராக நியமனம்

2. சென்னை மாநகர தலைமையிட கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி மாற்றப்பட்டு, தமிழக காவல்துறை தலைமையிட ஐஜிபியாக நியமனம்

3. நெல்லை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன், தூத்துக்குடி காவலர் தேர்வுப்பள்ளியின் முதல்வராக நியமனம்

4. தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் (பூந்தமல்லி, சென்னை) கமாண்டண்ட் ஆக இருந்த டி.பி.சுரேஷ் குமார், நெல்லை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக நியமனம்

5. தூத்துக்குடி காவலர் தேர்வுப்பள்ளியின் முதல்வராக இருந்த எஸ்.செந்தில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் (பூந்தமல்லி, சென்னை) கமாண்டண்ட் ஆக நியமனம்".

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x