Published : 27 Jun 2021 03:13 AM
Last Updated : 27 Jun 2021 03:13 AM

ஞாயிறுதோறும் 419 மின் ரயில்கள் இயக்கப்படும்

சென்னை

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் 419 மின்சார ரயில்கள்இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னைரயில் கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு தரப்பு மக்களும் பணிக்கு சென்று திரும்புகின்றனர். அதுபோல், பொதுமக்களும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க சீரான அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, இன்றுமுதல் இனி வரும் ஞாயிறுகளில் 419 மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதாவது, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் 149, கும்மிடிப்பூண்டி -66, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு 138, வேளச்சேரி - 50 இதுதவிர, ஆவடி, பட்டாபிராம் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டிப்போ 16 மின்சார ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இதற்கு முன்பு ஞாயிறுகளில் 96 மின்சார ரயில்கள்தான் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x