Published : 24 Jun 2021 12:54 PM
Last Updated : 24 Jun 2021 12:54 PM

ஹாட் லீக்ஸ்: பாய்கிறது பகீர் வழக்கு!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் மீது மிகவிரைவிலேயே ஊழல் வழக்கு பாயலாம் என்கிறார்கள். இவர்களோடு சேர்த்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமிக்கு எதிராகவும் சட்டவலை பின்னப்படலாம் என்று சொல்லப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் மீது பிடியை இறுக்குவதன் மூலம் கொங்கு மண்டலத்தில் அதிமுக இமேஜை சரிக்க முடியும் என கணக்குப் போடும் திமுக, அந்தச் சரிவு உள்ளாட்சித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் என நம்புகிறதாம். இதனிடையே, ஊழல் வழக்குப் பாயும் முன்னாள் அமைச்சர்களின் முதல் பட்டியலில் சி.விஜயபாஸ்கரையும் சேர்க்க வேண்டும் என சிபாரிசு செய்திருக்கிறாராம் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x