Published : 24 Jun 2021 09:11 AM
Last Updated : 24 Jun 2021 09:11 AM

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தாமதம்: அரசு நடவடிக்கை எடுக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட் டத்தின் கீழ் நலிவடைந்த குழந் தைகள் சேர்க்கை இதுவரை தொடங்கவில்லை. தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட் டத்தின் கீழ் மே மாத இறுதிக்குள் 25 சதவீத இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். ஜூன் மாத ஆரம்பத்தில் பள்ளிகளை தொடங்க வேண்டும். இது தொடர்பாக சமூக ஆர்வலர் வெரோனிக்கா மேரி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சில விளக்கங்களைப் பெற் றுள்ளார்.

அவர் கூறியதாவது:

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 2019-20-ம் ஆண்டு நிர்ணயித்த 1,24,859 இடங்களில் 73,790 இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்தது. மீதம் 51,069 இடங்கள் காலியாக இருந்தன. கடந்த 2020-21 கல்வியாண்டு கரோனா எதிரொலியால் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட் டத்தின் கீழ் ஆன்லைன் சேர்க்கை தாமதமானது. நிர்ணயித்த இலக்கு சேர்க்கை நடைபெறாததால் கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஆனால் பொதுப் பிரிவில் கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஜூன் மாதமே ஆரம்பிக்கப்பட்டது. இதனால் இலவச கட்டாயக் கல்வி உரி மைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை மாண வர்களின் கல்வி கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டது. நடப்பாண்டும் கரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் தனியார் பள்ளிகளில் பொதுப்பிரிவில் மாணவர் சேர்க்கை முடிந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.

ஆனால் 25 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான மாணவர் சேர் க்கை விண்ணப்பங்கள்கூட பெறப் படவில்லை. இத்திட்டத்தின் கீழ் குழந் தைகளைப் பள்ளியில் சேர்க்க ஆன்லைன் விண்ணப்பங்களை உடனே பெற புதிய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாமிநாதனிடம் கேட் டபோது, ‘‘இத்திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. வந்ததும் உறு தியாக தொடங்கிவிடும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x