Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

மாயமான அணு ஆராய்ச்சி மைய பொறியாளர் உடல் எரிந்த நிலையில் மீட்பு

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பசுமர்தி நாகேஸ்வரராவ் என்பவரின் மகன் சத்யசாய்ராம்(26). ரசாயன பொறியியல் பயின்றுள்ளார். இவர் கல்பாக்கம் நகரியப்பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பொறியாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 20-ம் தேதி அதிகாலை சத்யசாய்ராம் உடற் பயிற்சிக்காக மிதிவண்டியில் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீடு திரும்பிவில்லை என தெரிகிறது. இதையடுத்து, உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த பெற்றோர், மகனை காணவில்லை என கல்பாக்கம் போலீஸில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கடலூர் அடுத்த வேப்பஞ்சேரி பகுதியில் பாலாறு முகத்துவாரம் அருகே சத்யசாய்ராம் உடலை பாதி எரிந்த நிலையில் கூவத்தூர் போலீஸார் நேற்று மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டார். இதுதொடர்பாக கூவத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x