Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM

மதுரை சிறையில் 1500 கைதிகளுக்கு தடுப்பூசி: சிறப்பு முகாம் மூலம் ஏற்பாடு

மதுரை மத்திய சிறை வளாகத்தில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட கைதிகள்.

மதுரை

தமிழக சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள கைதிகள் மற்றும் சிறைக்காவலர்கள், அதிகாரி களுக்கு அந்தந்த சிறை நிர்வாகம் சிறப்புக் குழுக்களை ஏற்படுத்தி கரோனா தடுப்பூசிகளை போட நடவடிக்கை எடுக்க சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டார்.

இதன்படி, மதுரை மத்திய சிறையில் டிஐஜி பழனி தலைமையில் சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1500-க்கும் மேற்பட்டோருக்கு கோவாக்சின் முதல் டோஸ் தடுப்பூசி நேற்று முன்தினம் போடப்பட்டது. இதே போன்று அங்கு பணிபுரியும் சிறைக் காவலர்கள், அதிகாரிகள் 140-க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கெனவே கரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும், சிறைத்துறை யினர் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்தி ருப்பதாகவும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இம்முகாமில் சிறைக் கைதிகள் 1,461 பேருக்கும், பணியாளர்கள் 236 பேருக்கும், பெண்கள் சிறையில் கைதிகள் 63 பேருக்கும், பெண்கள் சிறை பணியாளர்கள் 26 பேருக்கும் மற்றும் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் 140 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x